Rock Fort Times
Online News

திருச்சி சிட்டி பகுதியில் போலீசார் அதிரடி சோதனை: 1,600 போதை மாத்திரைகளுடன் 6 பேர் கைது…!

திருச்சி, பொன்மலை ஜி கார்னர் பகுதியில் பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர்  வெற்றிவேல் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த கலையரசன் (வயது 26), ஜமீம் பாஷா (23), சதீஷ்குமார் (26), கணேஷ் பாண்டியன் (20) என்பதும், இவர்கள் போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. அதன்பேரில் அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 1,100 போதை மாத்திரைகள் மற்றும் செல்போன்கள் இரண்டு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதேபோல திருச்சி, எடத்தெரு பகுதியில் காந்தி மார்க்கெட் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக
இரு சக்கர வாகனத்தில் வந்த 3 வாலிபர்களை நிறுத்தி விசாரணை நடத்தியபோது அதில் ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்ற இருவரிடமும் போலீசார் விசாரணை செய்த போது அவர்கள் அரியமங்கலம் பகுதியை சேர்ந்த தவ்ஹீத் (21), அஜ்புதீன் (25) என்பதும், இவர்கள் அந்த பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ய வைத்திருந்ததும் தெரியவந்தது. அதன்பேரில் அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த இரண்டு செல்போன்கள், பணம் மற்றும் 500 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்