Rock Fort Times
Online News

திருச்சி ராம்ஜி நகரில் போலீசார் கஞ்சா வேட்டை: 4 பெண்கள் உட்பட 12 பேர் சிக்கினர்…!

திருச்சியில் கஞ்சா உட்பட போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்நிலையில் ராம்ஜிநகர் காவல் ஆய்வாளர் அழகுராமு தலைமையிலான போலீஸார் ராம்ஜி நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது 11 இடங்களில் கஞ்சா விற்ற மலைப்பட்டி ஆர்.சுகுணா (70), புது காட்டூர் கே.சுபாஷினி (36), சி. பவித்ரன் (28), கே.பாரதிராஜா (46), மில் காலனி ம.சுந்தர்ராஜ் (30), ந. சரவணன் (35), காந்தி நகர் குணா (29), புதுக்காட்டூர் சசிதரன் (47), தேவகி (35), மணிகண்டன் (46), கவிதா (45), மலைப்பட்டி பிரசாத் (32) ஆகிய 12 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 14,190 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்