Rock Fort Times
Online News

வழக்கறிஞா் காரை சேதப்படுத்திய மர்ம நபர்களுக்கு வலை வீச்சு…

திருச்சி அல்லித்துறை சிவன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பொன் முருகன். வழக்கறிஞா் . சம்பவத்தன்று இவர் திருச்சி- மதுரை ரோடு பகுதியில் தனது காரை நிறுத்திவிட்டு பெரிய கடைவீதிக்கு சென்று இருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது கார் கண்ணாடி உடைக்கப்பட்டும், நான்கு சக்கரமும் பஞ்சர்  ஆக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காரை சேதப்படுத்திய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்