பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவரும், அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவருமான ஜி.கே. மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார மருத்துவமனையில் நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள ஜி.கே.மணிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் சற்றுமுன்னதாக, சென்னை தலைமை செயலகத்துக்கு வருகை தந்திருந்த சேலம் மேற்கு தொகுதியின் பாமக சட்டப்பேரவை உறுப்பினர் அருளுக்கும் நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாமக எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.