பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு, மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் இன்று நடைபெற உள்ளது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் மிக பிரமாண்டமாக தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இருந்து பாமக தொண்டர்கள் மாநாட்டில் திரளாக பங்கேற்க இருக்கின்றனர்.இதனால் சட்ட – ஒழுங்கை நிலைநாட்டவும், அசம்பாவிதங்களை தவிர்த்திடவும், திருச்சி – சென்னை பைபாஸை ஒட்டியுள்ள திருச்சி பொன் நகர், டிவிஎஸ் டோல்கேட், திருவானைக்காவல் பைபாஸ், செக்போஸ்ட் அழகிரிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 டாஸ்மாக் கடைகள், 3 எப்எல் – 2 கடைகள் ஆகியவற்றை இன்று ஒரு நாள் முழுவதும் மூட மாநகர காவல் துறை உத்தரவிட்டுள்ளது
Comments are closed.