Rock Fort Times
Online News

பிளஸ்-2 பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் ஜூன் 23-ம் தேதி வெளியீடு…!

பிளஸ்-2 பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் ஜூன் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த மார்ச் 2025ல், நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத்தேர்வுகளின் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு 23.06.2025 (திங்கட்கிழமை) அன்று பிற்பகல் வெளியிடப்படவுள்ளது. இதில், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும், மேலும் இப்பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாட்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுகூட்டல், மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும், மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட புதிய மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும், மாற்றம் செய்யப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்