திருச்சி, திருவெறும்பூர் தொகுதியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும்மான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கை பம்ப் மற்றும் புதிய தார்சாலையை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அய்யம்பட்டி பொன்நகர் பகுதியில் கைப்பம்ப்பும், திருவெறும்பூர் ஒன்றியம் வாழவந்தான் கோட்டை, அன்னை தெரசா நகர் பகுதியில் தார் சாலையும் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் மக்கள் பயன்பாட்டிற்க்காக திறந்து வைத்தாா். இந்நிகழ்ச்சியில் ஒன்றியக் கழகச் செயலாளர் கருணாநிதி, சேர்மன் சத்யா மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.