தமிழக சட்டப்பேரவையில் இன்றைய தினம்(24-08-2026) பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார். அப்போது திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷங்களை எழுப்பினர். அத்துடன், இந்த விவகாரம் குறித்து பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி கொடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் திமுகவினருக்கு உடனடியாக பேச வாய்ப்பு மறுத்துவிட்டார். முதல்-அமைச்சர் விஜய், 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டதால், அதுகுறித்து பேச திமுகவினருக்கு அனுமதி அளிக்க முடியாது என தெரிவித்தார். அப்போது திமுகவினர் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டதால், அனைவரும் வெளியே சென்று கோஷமிடுங்கள் என சபாநாயகர் கூறினார். இதையடுத்து திமுகவினர் உடனடியாக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும், வெளியே செல்லும்போது ‘அனுமதி கொடு. அனுமதி கொடு’ என கோஷங்களை எழுப்பியபடியே சென்றனர். சற்று நேரத்திற்கு பிறகு சட்டமன்றத்திற்குள் வந்து அமர்ந்தனர்.

Comments are closed.