திருச்சி சிந்தாமணி காவேரி நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 62).இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஒட்டலில் வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக இவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் வீட்டிலிருந்த ராஜ்குமார் திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ராஜ்குமார் இறந்து விட்டதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
Comments are closed, but trackbacks and pingbacks are open.