Rock Fort Times
Online News

ஓ.பி.எஸ். எம்.எல்.ஏ. பதவிக்கு வந்தது புது சிக்கல்- சபாநாயகரிடம் மனு…!

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ய வலியுறுத்தி தேனி மாவட்டத்தை சேர்ந்த மிலானி என்பவர் சபாநாயகர் அப்பாவுவிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், போடிநாயக்கனூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வான ஓ.பன்னீர்செல்வம், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டதால் அரசியலமைப்பு சட்டம் 10-வது அட்டவணை பிரிவு 2/1-ன் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்தை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் என்று கூறப்படுகிறது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்