Rock Fort Times
Online News

ஓபிஎஸ் தரப்பு வழக்கில் அடுத்தடுத்து அடி மேல் அடி ! அனைத்து மனுக்களும் தள்ளுபடி -சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!

கடந்தாண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்து வந்த எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். சிலதீர்மானங்களும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.ஆனால் தாங்கள் தான் உண்மையான அதிமுக என கூறி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். இப்படி இருதரப்பும் மாறி மாறிவிமர்சனங்களை முன்வைத்த நிலையில், பொதுக்குழுவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தை ஓ.பன்னீர்செல்வம் நாடினார். இந்த வழக்கில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக அமைந்தது. இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக அமைந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இவ்வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க ஹைகோர்ட் அமர்வு நீதிபதி குமரேஸ் பாபு மறுப்பு தெரிவித்தார் .இந்த வழக்கு குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்