Rock Fort Times
Online News

திருச்சியில் ஆபரேஷன் ‘கஞ்சா வேட்டை 4.0’

ஆபரேஷன் ‘கஞ்சா வேட்டை 4.0’ என்ற பெயரில் திருச்சியில் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கையை கடந்த 1-ந்தேதி முதல் வருகிற 15-ந்தேதி வரை 15 நாட்கள் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். அதனடிப்படையில் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் எதிர்கால நலனை பாதுகாக்கும் வகையில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா ஐஏஏஸ் உத்தரவின்பேரில், திருச்சி மாநகரத்தில் கடந்த 6 நாட்களில் கஞ்சா வேட்டை நடத்தப்பட்டது. இதில் பள்ளி கல்லூரிகள் அருகாமையிலும் மற்றும் பொது இடங்களிலும் கஞ்சா போதை பொருட்களை விற்பனை செய்ததாக 21 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இதில் 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 44 கிலோ கஞ்சா, ஒரு செல்போன், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்