Rock Fort Times
Online News

முதல்வர் மருந்தக திறப்பு – அம்மா மருந்தகங்களுக்கு மூடுவிழா ? நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜே. இராதாகிருஷ்ணன் திருச்சியில் பேட்டி!

திருச்சியில், முதல்வர் மருந்தகம் மற்றும் ரேஷன் கடைகளில் தமிழக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்., கூட்டுறவுத்துறை மூலமாக இரண்டு மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன ஒன்று கூட்டுறவு மருந்தகம், மற்றொன்று அம்மா மருந்தகம். இவை தொடர்ந்து வழக்கம்போல் செயல்படும். ஒரு புதிய முயற்சியாக ஜெனரிக் மருந்துகள் கிடைக்கும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படுகிறது. இந்த மருந்தகத்திற்காக மூன்று பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சிறப்பு பொது மருந்துகள் 10 சதவீதம் விலை குறைவாக கிடைக்கும். இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் மருத்துவ செலவை வெகுவாக குறைக்க முடியும். முதல்வர் மருந்தகங்கள் இறுதிக்குள் துவங்கப்படும். இதன் மூலம் 186 தரமுள்ள மருந்துகள் விற்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை 300 நபர்களும் 440 சொசைட்டிகளும் முதல்வர் மருந்தகங்கள் நடத்த லைசன்ஸ் பெற்றுள்ளனர். முதலில் சென்னையில் துவங்கப்பட்டு, அதற்கடுத்து படிப்படியாக தமிழகம் முழுவதும் முதல்வர் மருந்தகங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேசினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்