Rock Fort Times
Online News

குடிபோதையில் தனியார் பேருந்தை தாறுமாறாக ஓட்டியதால் ஒருவர் படுகாயம்- ஓட்டுனருக்கு சரமாரி அடி…!

புதுக்கோட்டையில் இருந்து இலுப்பூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.சரவணன் என்பவர் அந்த பேருந்தை ஓட்டினார். திருவப்பூர் ரயில்வே கேட் நோக்கி அப்பேருந்து சென்ற போது தாறுமாறாக ஓடி அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது மோதி விபத்துக் குள்ளானது.இதில் அவர், தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.இதனையடுத்து காயமடைந்தவரை அருகே இருந்தவர்கள் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து தொடர்பாக சரவணனனை கீழே இறக்கி விசாரித்த போது, அவர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், குடி போதையில் பேருந்தை ஓட்டுகிறாயா? உன்னை நம்பி இத்தனை பயணிகள் ஏறி அமர்ந்துள்ளது உனக்கு தெரியவில்லையா?, என்று கேட்டு சரமாரியாக தாக்கினர்.அவருக்கு ஆதரவாக பேசிய நடத்துனர் பிரகாசுக்கும் தர்ம அடி விழுந்தது. இதனிடையே அந்த தனியார் பேருந்து உரிமையாளர் நேரில் வந்தால் தான் பேருந்தை எடுக்க விடுவோம் எனக் கூறி பொதுமக்கள் பேருந்தை சிறை பிடித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்