முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் தெருமுனை பிரச்சார கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரம் மலைக்கோட்டை பகுதி கழகத்தின் சார்பில் 34 மற்றும் 34 ஏ வட்டக் கழகத்தின் சார்பில் 34வது வட்டச் செயலாளர் சில்வியா நெப்போலியன், 34ஏ வட்டச் செயலாளர் கருணாநிதி ஆகியோர் தலைமையில் துரைசாமிபுரம் மெயின்ரோடு அருகில் தெருமுனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், கிழக்கு மாநகர செயலாளரும், மாநகராட்சி மண்டல குழு மூன்றின் தலைவருமான மு.மதிவாணன், தலைமைக் கழக பேச்சாளர் தக்கோலம் தேவபாலன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில், மாநகராட்சி துணைமேயர் திவ்யா தனக்கோடி மற்றும் மாவட்ட, மாநகர நிர்வாகிகள் மூக்கன், லீலாவேலு, சந்திரமோகன் , ஜெயநிர்மலா , சரோஜினி, நூர்கான், தலைமைக்கழக பேச்சாளர்கள் ஏர்போர்ட் பொன்னுச்சாமி, கோவிந்தராஜ் உட்பட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக மலைக்கோட்டை பகுதி செயலாளர் ராஜ்முகமது வரவேற்புரை ஆற்றினார். முடிவில் மாவட்ட அயலக அணி அமைப்பாளர் அடைக்கலராஜா நன்றி கூறினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.