ஒடிசா மாநிலம் கன்சாம் மாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகர் தாஸ் (வயது 47). இவர் திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலைய கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மாரடைப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது சகோதரர் வசந்த் தாஸ் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.