தமிழகத்தில் வேலை பாா்ப்பதற்க்கு பாதுகாப்பான சூழல் இல்லை என்கிற வதந்தி வாட்ஸ் அப், பேஸ் புக் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் வடமாநில தொழிலாளா்களுக்கிடையே வேகமாக பரவியது. இந்நிலையில் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் சொந்த ஊா்களுக்கு செல்வதற்காக ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளா்கள் ஒன்று கூடியதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. எனவே அங்கு சென்ற தாம்பரம் உதவி ஆணையா் சீனிவாசன் தலைமயிலனா போலீசாா் அவா்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா். அதில் வருகிற மாா்ச் 8ம் தேதி ஹோலி பண்டிகை வர இருப்பதால் ,அதற்காகவே சொந்த ஊா்களுக்கு செல்கிறோம் என்று அவா்கள் பதில் அளித்தனா். இருந்தாலும முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவா்கள் தாம்பரம் ரெயில் நிலையத்தில் ஒன்று கூடியுள்ளனா். இந்த விவகாரம் குறித்து பீகாா் முதல்வா் நிதிஷ்குமாாிடம் தொலைபேசியில் பேசிய தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளா்ளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என உறுதி அளித்தாா். மேலும் அவா்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம் என தொிவித்துள்ளாா். நேற்று திருச்சியில் செய்தியாளா்களை சந்தித்த தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஐ.பி.எஸ், வடமாநில தொழிலாளா்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்களை வதந்திகளாக பரப்ப வேண்டாம் என்றும் தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளா்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தொிவித்திருந்தாா். ஒரு வேளை பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது போல் உணரும் வெளி மாநிலத்தவா்கள் தொடா்பு கொள்ள வசதியாக 0421-2203313 என்ற தொலைபேசி எண்ணையும் 9498101300, 9498101320 என்கிற அலைபேசி எண்களையும் தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஜவுளித்தொழில் உற்பத்தியில் அதிகமாக ஈடுபட்டு வரும் திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலேயே அதிகமான வடமாநில தொழிலாளா்கள் வேலை செய்து வந்தனா். இந்நிலையில் அவா்கள் கூட்டம் கூட்டமாக சொந்த ஊா்களுககு செல்வதால் அங்கு தொழில்துறை பாதிக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்பு இல்லாததுபோல் உணர்ந்தால் 8883920500 என்ற எண்ணை அழைக்கலாம் என்று இந்திய ஜவுளித்துறை மற்றும் தென்னிந்திய மில்ஸ் சங்கம் தொிவித்துள்ளது.