திருச்சி மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் பட்டியலை கட்சியின் தலைவர் ஜிகே வாசன் எம்.பி அறிவித்துள்ளார்.
மாவட்டத் தலைவர் கே.டி.தனபால் பரிந்துரையின் பேரில் கீழ்க்கண்டவர்கள் புதிய நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மத்திய மாவட்ட பொருளாளராக குணசேகரன், மாவட்டத் துணைத் தலைவர்களாக கண்ணுச்சாமி, குமாரவடிவேல், மாவட்ட பொதுச் செயலாளர்களாக ராஜேந்திரன், ஆறுமுகம், மாவட்டச் செயலாளராக கமிட்டியார் சண்முகம், குணசேகரன், ராமகிருஷ்ணன், அசோகன், மணிகண்டம் தெற்கு வட்டார தலைவராக அந்தோணிசாமி என்கிற சேவியர், மணிகண்டம் வடக்கு வட்டார தலைவராக ரெங்கபாசம், அந்தநல்லூர் வட்டார தலைவராக பன்னீர்செல்வம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். திருச்சி மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் அனைவரும் மாவட்டத் தலைவர் கே.டி.தனபாலை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Comments are closed.