திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள நாகலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி தனலட்சுமி. கணவன்- மனைவி இருவரும் முசிறியில் நடைபெறும் உறவினர் இல்ல வளைகாப்பு நிகழ்ச்சிக்காக இருசக்கர வாகனத்தில் சென்றனர். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.
நாகலாபுரம் அருகே உள்ள வனப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில், கணவன்- மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு தலையில் அடிபட்டதால் தனலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சேகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி சென்ற கோயமுத்தூரை சேர்ந்த பூபதி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.