திருச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளா் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: விமான நிலைய சம்பவத்தில் என் மீது வழக்கு புனையப்பட்டுள்ளது. காவல் நிலையத்தை தாக்கியவர்கள் மீது பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக வழக்கு பதிவு செய்யப்படவில்லை. திருச்சியில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவை கொடுத்த கடிதத்தை வைத்து எங்களுக்கு அனுமதி மறுத்துள்ளனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை ஆனவர்கள் தற்போது சிறப்பு முகாம் என்ற பெயரில் திருச்சியில் ஒரு சித்திரவதை முகாமில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை விடுவிக்க வலியுறுத்தி தான் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டோம். அவர்கள் விரும்பும் தேசத்துக்கு பாஸ்போர்ட் கொடுத்து அவர்களை அனுப்பி வைக்க வேண்டும். கேலிச்சித்திரம் வரையக்கூடாதா? எங்களை சமூக வலைதளங்களில் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் காயப்படுத்தலாம் ஆனால் உங்களை விமர்சிக்கக் கூடாதா? திமுக தனது தேர்தல் அறிக்கையில் தகுதியுள்ள குடும்பப் பெண்களுக்கு உரிமை தொகை வழங்கப்படும் என்று சொல்லவில்லை இப்போது எந்த அடிப்படையில் நீங்கள் தகுதியை நிர்ணயம் செய்கிறீர்கள் .ஆன்லைன் சூதாட்டத்தால் 40 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அது சூது இல்லை திறன் மேம்பாடு என்று பேசுவது தவறானது. வருகிற பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும்.
ஓட்டுக்கு காசு என்ற நிலை இருப்பதால் இப்போதைக்கு எங்களுடன் எந்த கட்சியும் கூட்டணிக்கு வர வாய்ப்பு இல்லை. எங்கள் வாக்கு சதவீதம் உயரும்போது அது நடக்க வாய்ப்பு உள்ளது.
