Rock Fort Times
Online News

திருச்சியில் மாயமான டிரைவர் சடலமாக மீட்பு …

திருச்சி ராம்ஜிநகர் அருகே உள்ள பெரிய கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் நாகராஜ்.
இவரது மகன் ரஞ்சித்(வயது 29). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் சிமெண்ட் கிடங்கில் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (29.07.2023) வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அவரது பெற்றோா் ரஞ்சித் வேலை செய்யும் சிமெண்ட் கிடங்கிற்கு தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் மாத சம்பளத்தை ரஞ்சித் பெற்றுக் கொண்டு இரவு 8 மணிக்கே வீட்டுக்கு புறப்பட்டு சென்று விட்டதாக அங்குள்ளவா்கள் தெரிவித்துள்ளனர். நள்ளிரவு வரை ரஞ்சித் வீடு திரும்பாததால் ,  பல்வேறு இடங்களில் அவரை தேடியுள்ளனா் . இந்நிலையில்   இரட்டை மலை செல்லும் வழியில் உள்ள கொத்தமங்கலம் சுடுகாட்டில் இளைஞர் ஒருவரின் பிணம் கிடப்பதாக எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்ற  போலீசாா் நடத்திய விசாரணையில், அது ரஞ்சித்தின் உடல் என்பது தெரியவந்தது. இறந்து போன ரஞ்சித்தின் உடலில் காயங்கள் காணப்பட்டன. மேலும் முகத்தில் மரத்தை பாலீஷ் செய்ய பயன்படுத்தும் வார்னீஷ் ஊற்றப்பட்டு இருந்தது. பணத்திற்காக மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து உடலை கைப்பற்றிய போலீசார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா். மாயமான டிரைவர் மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்