Rock Fort Times
Online News

சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு…!

தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று(15-06-2025) மதியம் திருச்சி வந்தடைந்தார். அவருக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி,ரகுபதி,கோவி.செழியன், மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி .ஆர்.பாலு, திருச்சி சிவா, அருண் நேரு,திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் புத்தகங்கள் வழங்கி உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலை மார்க்கமாக கல்லணை சென்று அங்கு விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார். இன்று மாலை டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து முதல்வர் தண்ணீரை திறந்து வைக்கிறார். அதனைத்தொடர்ந்து தஞ்சாவூர் செல்லும் அவர் அங்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்து,திமுக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.பின்னர் இரவு தஞ்சையில் ஓய்வெடுக்கும் முதல்வர் நாளை காலை சட்டமன்ற உறுப்பினரும், தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளருமான துரை சந்திரசேகரன் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார். நாளை மாலை தஞ்சையில் இருந்து புறப்பட்டு திருச்சி வருகை தரும் முதலமைச்சர் திருச்சி விமான நிலையத்திலிருந்துவிமானம் மூலம் சென்னை செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் வருகையை ஒட்டி திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்