Rock Fort Times
Online News

அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் 5 பேரின் ஜாமீன் மனு விசாரணை 27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களும் எம்.பி சிவா ஆதரவாளர்களும் மோதிக்கொண்ட சம்பவம் அனைவருக்கும் நினைவு இருக்கலாம். காஜாமலை விஜய், முத்து செல்வம், ராம்தாஸ், துரைராஜ், திருப்பதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஐந்து பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் திருச்சி இரண்டாவது ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 5 பேருக்கும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்ட்ரேட் பாலாஜி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ஓம் பிரகாஷ் ஜூனியர் அதே நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்தார் .இந்த மனுவை மாஜிஸ்திரேட் பாலாஜி நேற்றும் தள்ளுபடி செய்தார் . இதைத்தொடர்ந்து காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய திமுகவினர் நேற்று திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை வரும் திங்கட்கிழமை 27ஆம் தேதிக்கு திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி பாபு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்