Rock Fort Times
Online News

திருச்சி, காட்டூரில் உள்ள பெரியார் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை …!

தந்தை பெரியாரின் பிறந்த நாளை யொட்டி, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், திருச்சி- தஞ்சை சாலை காட்டூரில் அமைந்துள்ள பெரியாரின் உருவச் சிலைக்கு திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி  மாலை அணிவித்து மரியாதை  செலுத்தி சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றார். இந்நிகழ்வில் கிழக்கு மாநகர கழகச் செயலாளர் மு.மதிவாணன், மாநிலங்களவை  உறுப்பினர் கவிஞர் சல்மா, தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், சபியுல்லா, செந்தில், பகுதிக்கழகச் செயலாளர் நீலமேகம் மற்றும்   மாநில, மாவட்ட மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்