Rock Fort Times
Online News

பிளஸ்1 தேர்வு மையத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு.

அரியலூரில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க அரியலூர் வந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, மாணவர்களுக்கான உணவுகள் தரம், அடிப்படை வசதிகள், பிளஸ்1 தேர்வு நடைபெறும் மையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து, பள்ளி மைதானம், விளையாட்டு உபகரணங்கள் குறித்தும் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது, அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி உட்பட பலரும் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்