திருச்சியில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழை காரணமாக மாநகரில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி இருந்தது. இதனை திருச்சி மாநகராட்சி பணியாளர்கள் மூலம் உடனடியாக அகற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று(17-12-2024) திருச்சி தில்லைநகர் 22-வது வார்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுகாதாரப் பணிகள் குறித்து மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இன்னும் தாழ்வான பகுதிகளில் தேங்கியிருக்கும் மழை நீரை உடனடியாக அகற்றவும், நோய் தொற்று பரவாமல் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முன்னதாக மண்டலம் எண்4, 56- வது வார்டு பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமையும் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் செண்ணு கிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் இப்ராஹிம், கோட்டத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன், மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Comments are closed.