திருச்சிராப்பள்ளி சந்திப்பில் பயணிகள் பயணக் களைப்பை போக்க தனியார் பங்களிப்புடன் மசாஜ் சென்டர் உருவாக்கப்பட்டுள்ளது.
அதிநவீன தொழில்நுட்பங்கள், மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிமையாக்கும் உபகரணங்கள், மக்களை நாளுக்கு நாள் கவர்ந்து வருகின்றன. இது ஒரு புறம் இருக்க தேவைக்கேற்ப மக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது . நெடுநேரம் இடைவிடாத வேலை மற்றும் பயணம், அனைத்து ஆற்றலையும் வெளியேற்றுகிறது. இத்தகைய வாழ்க்கை சோர்வை மட்டுமல்ல, மனித உடலில் மன அழுத்தத்தையும் சோர்வையும் அதிகரிக்கிறது. இந்த பார்வையில், பயணிகளின் மன அழுத்தத்தை குறைக்க ரயில் பயணிகளுக்கான வசதிகளை ரயில்வே நிர்வாகம் மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில், திருச்சிகோட்ட ரயில்வே கூடுதல் மேலாளர் ராமலிங்கம் ‘மசாஜ் நாற்காலி’ கியோஸ்க்கைத் திறந்து வைத்தார். இ-ஏலத்தின் மூலம் 3 ஆண்டுகளுக்கு ரெஸ்டோலாக்ஸ் அட்வான்ஸ் ஹெல்த் கேர் எக்யூப்மென்ட்களுக்கு திருச்சிராப்பள்ளி கோட்டத்தால் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. தென்னக ரயில்வேயில் மின் ஏலத்தில் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். களைப்பைப் போக்க நீண்ட பயணத்திற்குப் பிறகு பயணிகள் குறைந்த செலவில் தலை முதல் கால் வரை மசாஜ் செய்யலாம். இதேபோல், ஸ்டேஷனில் காத்திருக்கும் பயணிகளும் ரயிலில் ஏறுவதற்கு முன் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கான விருப்பம் இருக்கும். இது உடனடியாக இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் உடல் வலிகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது என பயணிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். 5நிமிட மசாஜ் செய்ய 50 ரூபாயும், 10 நிமிட மசாஜ்க்கு 100 ரூபாயும், 15 நிமிட மசாஜ்க்கு 150 ரூபாயும் வசூலிக்க கட்டணமாக பெறப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மசாஜ் செய்து கொள்ளலாம். கர்ப்பிணிகள், இதய நோய் உள்ளவர்கள் மசாஜை தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.
