Rock Fort Times
Online News

மக்களைத் தேடி மருத்துவம் ஆலைகளிலும் தொடரப்போகுது பட்ஜெட்டில் அறிவிப்பு.

தமிழ்நாடு அரசின் வரவு செலவு திட்ட பகிர்வு இன்று சட்டசபையில் நடந்தது நிதி அமைச்சர் பட்ஜெட் உரையை வாசித்தார். அதில் மருத்துவ மற்றும் சுகாதாரத் துறைக்கு 18 ஆயிரத்து 661 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அரசின் திட்டங்களில் மக்களை தேடி மருத்துவ முகாம் இன்னுயிர் காப்போம் என்பது போன்ற திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொற்றா நோய்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது என்பது மருத்துவ முகாமின் முக்கிய அம்சமாகும். மக்களை தேடி மருத்துவம் ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும் விரிவுபடுத்த இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உயர் இரத்த அழுத்த சோதனை மற்றும் நீரிழிவு ஆகியவற்றிற்கு மக்களை தேடி மருத்துவம் மூலம் சிகிச்சை பெற 711 தொழிற்சாலைகளிலும் கட்டுமான தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும் மருத்துவத் திட்ட முகாம் மூலம் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 8.35 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறுவர் .இதில் புலம்பெயர் தொழிலாளர்களும் பயன்படலாம் என்று பட்ஜெட் உரையில் அரசு அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்