Rock Fort Times
Online News

பராமரிப்பு பணிகள் முடிந்தது – தென்மாவட்ட ரயில்களுக்கு ” கிரீன் சிக்னல் ” கொடுத்தது மதுரை கோட்ட ரயில்வே !

மதுரை கோட்ட ரயில்வேக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தண்டவாள பராமரிப்பு பணிகளுக்காக தென் மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே பராமரிப்பு பணிகள் முடிந்ததால் இந்த ரயில்கள் அனைத்தும் வழக்கம் போல அதே பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி,மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டை செல்லும் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ்,குருவாயூர் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், ஹவுரா எக்ஸ்பிரஸ், போன்ற தென் மாவட்ட ரயில்கள் வழக்கமான பாதையில் இயக்கப்படும். அதேபோல சென்னை – மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் 28,31 ஆகிய தேதிகளில் இரு மார்கங்களிலும் திருச்சி வரை இயக்கப்படுவதற்கு பதிலாக மதுரை வரை இயக்கப்படும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ரயில் பயணிகள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்