Rock Fort Times
Online News

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி…!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு வலது தோள்பட்டையில் ஏற்கனவே எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை  அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது வைகோவுக்கு வலது தோள்பட்டை  எலும்பில் பிளேட் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்தநிலையில், வைகோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின் ஒரு பகுதியாக, மீண்டும் ஒரு சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாக மதிமுக எம்.பி. துரை வைகோ தெரிவித்தார். அறுவை சிகிச்சையின்போது வைக்கப்பட்ட பிளேட்டை அகற்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்