திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய வே.சரவணன் ஐஏஎஸ் திருச்சி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய லி.மதுபாலன் ஐஏஎஸ் திருச்சி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். அவர் இன்று(27-06-2025) திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையராக பொறுப்பேற்று கொண்டார். அப்போது அவர் திருச்சி மாநகர மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும் முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவேன் என தெரிவித்தார். புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ஆணையரை மாநகராட்சி ஊழியர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இவர் இதற்கு முன்பு கடலூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் சார் ஆட்சியர் ஆகவும் மதுரை மற்றும் தூத்துக்குடி மாநகராட்சிகளில் ஆணையராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.