சுற்றுசூழல் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே துவக்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் முன் முயற்சியின் கீழ் ரூ 5 லட்சம் மதிப்பிலான தானியங்கி மஞ்சப்பை வழங்கும், எந்திரம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கருடமண்டபத்தில் நிறுவப்பட்டது. இந்த தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திர துவக்கவிழா இன்று ( 15.09.2023 ) நடைபெற்றது. இதனை இந்தியன் ஆயில் நிறுவன தமிழ்நாடு பிராந்திய செயல் இயக்குனர் பி.சி.அசோகன், திருச்சி மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் சிவரஞ்சனி, உதவி செயற்பொறியாளர் தேவகி, விநியோகஸ்தகர் ஸ்ரீரெங்காகேஸ் ஆர்.சந்திரன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலையில் கோவில் அர்ச்சகர் சுந்தர்பட்டர் துவக்கி வைத்தார். விழாவில் இந்தியன் ஆயில் எல்பிஜி பாட்லிங் ஆலை துணை பொது மேலாளர் த.முரளி, சென்னை மேலாளர் சரவணன், திருச்சி முதுநிலை மேலாளர் பரேஷ்ருதாகியா, மேலாளர்கள் ரேச்சல் பிரியங்கா, சங்கீதா, செயல்பாட்டு அதிகாரி பவித்ரா, இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் மற்றும் சுற்றுசூழல் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.