Rock Fort Times
Online News

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக எம்.முஹமது ஷெரிப் நியமனம்…!

மாநில தலைவர் எம்.தமிமுன் அன்சாரி அறிவிப்பு

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக திருச்சி எம்.முஹமது  ஷெரிப்பை மாநில தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம்.தமிமுன் அன்சாரி நியமனம் செய்துள்ளார். மாநில இளைஞரணி செயலாளராக நியமனம் செய்யப்பட்ட எம்.முஹமது ஷெரிப் கட்சியின் மாநில தலைவர் எம்.தமிமுன் அன்சாரி, மாநில பொதுச் செயலாளர் மௌலா நாசர், பொருளாளர் ஜே.எம் ரிபாய் மற்றும் மாநில செயலாளர் கலைக்குயில் இப்ராஹிம், நாகை முபாரக், வல்லம் அஹமது கபீர், பேராவூரணி சலாம் உட்பட அனைத்து மாநில நிர்வாக குழுவினருக்கும், திருச்சி மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். இப்பொறுப்பினை அமானிதமாக கருதி கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பேன் என்றும், முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வேன் எனவும் முஹமது ஷெரிப் தெரிவித்தார். அவருக்கு கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்