Rock Fort Times
Online News

முன்விரோதத்தில் கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை!

திருச்சி மாவட்ட மருங்காபுரி துலுக்கம்பட்டியை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவரது கணவர் பாலமுருகன்(35). கலைச்செல்வியின் தந்தை பழனியாண்டி வசித்து வரும் சிங்கவயலில் இணைந்து வசித்து வந்துள்ளனர். பழனியாண்டிக்கும் பக்கத்துவீட்டில் வசித்துவரும் அதினாமிளகிக்கும் முன்விரோதம் இருந்துவந்துள்ளது, கடந்த 2022 ஆண்டு ஜனவரி மாதம் கலைச்செல்வி,பாலமுருகன் மற்றும் அவரது மகனுடன் சென்றபோது, அங்குவந்த அதினாமிளகி கையில் கொண்டு வந்த அரிவாளால் பாலமுருகன் மார்பில் குத்தியுள்ளார், அதில் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார், இதுக்குறித்து கலைச்செல்வி வளநாடு காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது, இன்று அந்த வழக்கின் இறுதி விசாரணை கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி தங்கவேல் வழக்கை விசாரித்து
அதினாமிளகிக்கு ஆயுள் தண்டனையும், 2ஆயிரம் ரூபாய் அபராதமும் வழங்கி தீர்ப்பளித்தார். இதையடுத்து அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்