கரூரில்,தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுவினர் நஞ்சை புகலூர் கிராமத்தில் ,காவிரி ஆற்றின் குறுக்கே நடைபெற்று வரும் கதவணை பணிகளை ஆய்வு செய்தனர். பின்னர் நஞ்சை புகலூர் கிராமத்தில் கரூர் நாமக்கல் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், 406.50 கோடி ரூபாய் மதிப்பில், காவிரி ஆற்றின் குறுக்கே நடைபெற்று வரும் கதவணை பணிகளை ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து ஆவின் பால் நிறுவனத்தில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடத்தையும் ஆய்வு செய்தனர். பின்னர், அரவக்குறிச்சி தீயணைப்பு நிலையத்தை ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.இந்த ஆய்வுக் குழுவில் வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமார், திண்டிவனம் எம்எல்ஏ அர்ஜுனன், ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ், ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன், அறந்தாங்கி எம்எல்ஏ ராமச்சந்திரன், குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ இளங்கோ உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
