திருச்சி தேசிய கல்லூரி கணிதவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறை சார்பில் கல்லுாாியின் வி. கிருஷ்ணமூர்த்தி அரங்கத்தில் நேற்று ( 09.01.2024 ) கணிதமேதை ராமானுஜன் அறக்கட்டளை விரிவுரை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஸ்லோவேனியாவின் மாரிபோர் பல்கலைக்கழகத்தின் கணிதத்திற்கான முழு பேராசிரியரான போஸ்ட்ஜான் பிரேசர் மற்றும் ஹூங்காரியன் அகாடமி உறுப்பினர் பேராசிரியர் கியுலா ஓ.எச் கட்டோனா ஆகியோர் முறையே” ஹாலின் திருமணத் தேற்றம் மற்றும் அதற்கு அப்பால்“, “ராமானுஜன் மற்றும் எா்டோஸ்“ என்ற தலைப்பில் விரிவுரையாற்றினர். துறைத்தலைவா் மேஜா் டாக்டா். டி. முத்துராமகிருஷ்ணன் வரவேற்றாா். கல்லுாாி துணை முதல்வா், தலைவா் மற்றும் உடற்கல்வி இயக்குனா் டாக்டா். டி. பிரசன்னபாலாஜி தலைமை உரை ஆற்றினாா். பாரதிதாசன் பல்கலைக்கழக கணித இணைப் பேராசிாியா் டாக்டா். ஆா். பாலகிருஷ்ணன், ராமானுஜன் பற்றி கவிதையுடன் விாிவுரையாற்றினாா். கல்லுாாியின் பொறுப்பு முதல்வா் டாக்டா். எஸ். சுனிதா தலைமை விருந்தினரை கவுரவித்தாா். இதில் தேற்றத்தின் பல நிஜ வாழ்க்கை பயன்பாடுகள் மற்றும் சான்றுகள் விளக்கப்பட்டது. ராமானுஜன் வாழ்க்கை வரலாறு மற்றும் சில சுவாரஸ்யமான முடிவுகளும் எடுத்துரைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியின் போது சில மாணவா்கள் தலைமை விருந்தினருடன் உரையாடினா். முடிவில் கணிதத்துறை உதவிப் பேராசிாியா் டாக்டா். கே. பாக்யஸ்ரீ நன்றி கூறினாா்.
*
Comments are closed, but trackbacks and pingbacks are open.