Rock Fort Times
Online News

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் மதிப்பெண் சான்று பெற கடைசி வாய்ப்பு…

திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப் குமார் ஐஏஎஸ் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செப்டம்பர் 2015 முதல் அக்டோபர் 2018 வரையிலான பருவங்களில் தேர்வெழுதிய பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றுகளை பெற்றுக்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மேற்கண்ட பருவங்களில் தேர்வெழுதிய தனித் தேர்வர்களுக்கு அவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோக மையத்தில் தேர்வர்களால் நேரில் பெறப்படாமலும், அஞ்சல் மூலம் அனுப்பியும் பட்டுவாடா ஆகாமலும், அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் திருச்சியில் உள்ள அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் திரும்பப் பெறப்பட்டுள்ளன. தேர்வு திட்ட விதிமுறைகளின்படி மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட்ட நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்கு பின்னர் அவை அழிக்கப்படுவது வழக்கம்.
எனவே, செப்டம்பர் 2015 முதல் அக்டோபர் 2018 வரையிலான 10 பருவங்களில் தேர்வெழுதி இதுவரை மதிப்பெண் சான்றிதழ் பெறப்படாத தனித்தேர்வர்கள் இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்தி தங்களது மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழ் பெற விரும்புவோர் வெள்ளைத்தாளில் தேர்வு பதிவெண், தேர்வெழுதிய பருவம், பிறந்த தேதி, தேர்வெழுதிய பாடம் மற்றும் தேர்வு மையத்தின் பெயர் உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட்டு அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம், 16|1, வில்லியம்ஸ் சாலை, மத்திய பேருந்து நிலையம் அருகில், திருச்சி- 620 001 என்ற முகவரியில் டிசம்பர் 31ம் தேதிக்குள் அலுவலக வேலை நாட்களில் சமர்பித்து நேரில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் குறிப்பிட்ட இப்பருவத்திற்கு பின்னர் தேர்வெழுதி இதுவரை மதிப்பெண் கிடைக்கப் பெறாதவர்களும் தங்களது மதிப்பெண் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்