கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர் அருண்பாபு, தனியார் நட்சத்திர ஓட்டலில் தலைமை சமையல் கலை நிபுணராக உள்ளாா். இவா் குழம்பு மற்றும் கிரேவி வகைகளை வேகமாக செய்வதில் தனித்திறமை கொண்டவர்.இந்நிலையில் இதில் சாதனை புரிய விரும்பிய அருண்பாபு ஆறு மணி நேரத்தில் 350 க்கும் மேற்பட்ட குழம்பு மற்றும் கிரேவி வகைகளை செய்து அசத்தியுள்ளனார்.இதில் செட்டிநாடு,சவுத் மற்றும் நார்த் இந்தியன்,சைனீஸ், சைவம் மற்றும் அசைவ மல்ட்டி குஸைனாக செய்துள்ளார்.குறிப்பாக ஒரே இடத்தில் ஹைதராபாதி,ஹன்சாய்,பஞ்சாபி,மலாய்,தாய்,செட்டிநாடு, கேரள மலபார் என மல்ட்டி குசைனில் ,மட்டன்,சிக்கன்,மீன் மற்றும் முட்டை,இறால் கிரேவி,குழம்புகளை சமைத்துள்ளார்.அதே போல சைவ வகையில், பூண்டு கார குழம்பு,மிளகு,மோர் குழம்பு, சாம்பார் என 350 க்கும் மேற்பட்ட கிரேவி குழம்பு வகைகளை செய்துள்ளாா். எனவே இவரது சாதனை நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
