கடலூர் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர், திருச்சியில் ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் இரும்பு ராடுகளை திருடு முயன்றதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை விசாரித்த நீதிபதிகள் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டனர். இதையடுத்து போலீசார் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைப்பதற்காக அழைத்து வந்தனர். அப்போது சிறைக்காவலர்கள் அவரை சோதித்தபோது விக்னேஷ் அணிந்திருந்த உடையில் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறை போலீசார் உடனடியாக கே.கே நகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விக்னேஷிடம் கஞ்சா வந்தது எப்படி? யார் கொடுத்தார்கள் ? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.