Rock Fort Times
Online News

கள்ளச்சாராய சம்பவம்: தமிழகத்தில் பி.ஜே.பி சார்பில் 22-ம் தேதி ஆர்ப்பாட்டம்- அண்ணாமலை…!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 40 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் கவலைக்கிடமாக உள்ளனர். இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சியில், கள்ளச் சாராயத்தினால் 35-க்கும் அதிகமான உயிர்கள் பறிபோயிருக்கின்றன என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.  கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக தெரிவித்துள்ளோம்.  திமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்றுள்ள கள்ளச் சாராய உயிரிழப்புகள், 1980 காலகட்டத்தில் ஏற்பட்டதைப் போல, தமிழகம் நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறதா? என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.  இதற்கு தார்மீக பொறுப்பு ஏற்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் பதவி விலக வேண்டும். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 60 உயிர்கள் கள்ளச்சாராயத்தினால் பறிபோனதற்குப் பின்னரும், முதல்வராக தொடர தனக்கு தார்மீக உரிமை உள்ளதா என்பதை ஸ்டாலின் எண்ணிப் பார்க்க வேண்டும்.  தமிழகம் முழுவதும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்காமல், தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசை கண்டித்து ஜூன் 22 அன்று, தமிழக பாஜக சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று  குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்