Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டத்தில் 2 வீடுகளில் 10 பவுன் நகை திருட்டு..

போலீசார் விசாரணை

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சின்ன சேலம் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சடையப்பன் (வயது 46 ). இவர் கண்ணனூர் பகுதியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று காலை அவர் கடைக்கு சென்று விட்டார். அவரது மனைவி மற்றும் மூத்த மகள் ஆகியோர் அருகிலுள்ள மாவு மில்லுக்கு சென்று இருந்தனர்.
இளைய மகள் வீட்டை பூட்டி விட்டு துறையூரில் உள்ள தட்டச்சு மையத்துக்கு சென்றார். இதற்கிடையே சடையப்பன் மதியம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 6 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. மேலும், அறையில் வைத்திருந்த ரூ.15 ஆயிரமும் திருட்டுப் போய் இருந்தது. இதேபோல மண்ணச்சநல்லூர் மண்படிமங்கலம் ஹரிஜன தெரு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது வீட்டில் மூன்றே முக்கால் பவுன் நகை திருட்டு போனது. இது குறித்த புகார்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்