திருச்சி,ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை தாத்தாச்சாரியார் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி .இவரது மனைவி உஷா (வயது 60). இவர் தனது பேரனுடன் அப்பகுதியில் உள்ள வரசக்தி விநாயகர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பின்னர் வீட்டுக்கு திரும்ப முற்படும்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் உஷாவின் கழுத்தில் கிடந்த மூன்றரை பவன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டார் .இது குறித்து உஷா கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பன் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.திருச்சி மாநகரின் முக்கிய பகுதியான ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ரோட்டில் பட்டப் பகலில் நடந்த இந்த செயின் படிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சமீபகாலமாக திருச்சி மாநகரில் செயின் பறிப்பு, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இது போன்ற சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை விரைந்து கைது செய்வதோடு,அவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்து பொதுமக்களை காக்க வேண்டும் என திருச்சி மாநகர காவல் துறைக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Comments are closed.