திருச்சி, திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் அகிலா. இவர் எடமலைப்பட்டி புதூரில் உள்ள ஒரு ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இன்று(12-01-2025) அதிகாலை வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் புறப்பட்ட அகிலா, காந்தி மார்க்கெட்டில் காய்கறி வாங்கிக்கொண்டு எடமலைப்பட்டிபுதூர் ஹோட்டலுக்கு சென்று கொண்டிருந்தார். அரிஸ்டோ மேம்பாலத்தில் சென்றபோது அவர் அருகில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமி ஒருவர் திடீரென்று அகிலா கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்துக் கொண்டு வேகமாக தப்பி சென்று விட்டார். இந்த வழிப்பறி குறித்து திருச்சி கண்டோன்மென்ட் போலீசில் அகிலா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர். அரிஸ்டோ மேம்பால பகுதியில் அடிக்கடி இதுபோன்ற வழிப்பறி சம்பவங்கள் நடக்கின்றன. ஆகவே, போலீசார் இரவு ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.