Rock Fort Times
Online News

ஜெயலலிதா கார் டிரைவரின் அண்ணன் மருத்துவமனையில் அனுமதி…

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்தவர் கனகராஜ். இவர் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையவர். அவர் கைது செய்யப்படுவதற்குள் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கில் சில ஆவணங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் , ஜாமீனில் வெளியே வந்த அவர், கடந்த வாரம் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் அவருக்கு இன்று ( 17.08.2023 )  காலை மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் இரண்டாவது முறையாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உயர் சிகிச்சைக்காக போலீஸ் பாதுகாப்புடன் கோயம்புத்தூர் அழைத்து செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டார். முன்னதாக அவர் தனது 2 மகள்களை முதல்வர் தான் காப்பாற்ற வேண்டும் என்றும், மேச்சேரி காவல் ஆய்வாளர் வில்லிங் லெட்டர் கொடுக்கவில்லை, காப்பாற்றுங்கள் முதலமைச்சர் என்று கதறி அழுதது பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்