Rock Fort Times
Online News

பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கிறதா மதிமுக?- பொதுச்செயலாளர் வைகோ “பளிச் ” பதில்..!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 21ம் தேதி நடைபயிற்சியில் ஈடுபட்டபோது அவருக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவாறே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பணிகளை மேற்கொண்டு வந்தார். ஒருவார கால சிகிச்சை முடிந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 27ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். 3 நாட்கள் ஓய்வுக்குப்பின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகம் வந்து வழக்கமான பணிகளை தொடங்கினார். இதனிடையே, மருத்துவமனை சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அரசியல் கட்சியினர் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, முதல்-அமைச்சரின் உடல்நலம் குறித்து வைகோ விசாரித்தார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பிற்குப்பின் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, முதல்-அமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். கவின் படுகொலையில் அரசு எடுத்த நடவடிக்கையை வரவேற்கிறேன். ஆணவக்கொலைகளை தடுக்க கடும் சட்டம் இயற்ற வேண்டும் என முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தினேன். 2026 தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளுடன் என்றைக்கும் கூட்டணி இல்லை என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்