Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த திமுகவினரிடம் நேர்காணல் நடத்தும் தேதி மாற்றம்…!

தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுக வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மறுபுறம் திமுக சார்பில் போட்டியிட விரும்பி விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை( 21-3-2026) சனிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நேர்காணல் ரமலான் பண்டிகையை முன்னிட்டு 23-3-2026 (திங்கட்கிழமை) அன்று நடைபெறும் என்று தலைமைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மார்ச் 23 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு திருச்சி வடக்கு, திருச்சி மத்திய, திருச்சி தெற்கு, தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, தஞ்சை மத்திய, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கும், மாலை 4 மணிக்கு புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடைபெறும். இத்தகவலை தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்