“ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா” என்ற கருப்பொருளுடன், இன்று(21-06-2025) 11-வது சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் புகழ்பெற்ற இடங்களில் இந்த கொண்டாட்டங்கள் உற்சாகமான நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள விவேகானந்தா யோகா மையம், பாரதிய ஜனதா கட்சி சார்பாக யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் முனைவர் சந்தான கிருஷ்ணன் மற்றும் முனைவர் ஸ்ரீதர் ஆகியோர் பங்கேற்று யோகா விழிப்புணர்வு பயிற்சி அளித்தனர். இதில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று யோகா செய்தனர்.
Comments are closed.