உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் மலைக்கோட்டை கோட்டம் அஞ்சு தலைமையில் திருச்சி இபி ரோடு சத்தியமூர்த்தி நகரில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் புரட்சித் தளபதி சு. திருநாவுக்கரசர் கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றி மகளிருக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கினார். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம்.சரவணன்,மலைக்கோட்டை முரளி,பஜார் மைதீன், மலைக்கோட்டை கோட்டம் வெங்கடேஷ் காந்தி, ஜங்ஷன் கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல், கலைப்பிரிவு ராஜீவ் காந்தி, சண்முகம், சொக்கலிங்கம், வார்டு தலைவர்கள் சம்சுதீன்,பத்மநாபன் ,திருச்சி கிழக்கு இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் முகமது ரஃபீக், பட்டேல், நிர்மல் குமார், கோகுல் ,ரியாஸ் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்
