தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நிர்வாக காரணங்களுக்காக டிரான்ஸ்ஃபர் செய்தது. அதன்படி திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த வே.சரவணன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த மதுபாலன் திருச்சிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். இவர் 2018ம் ஆண்டு தனது 23 வயதில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றவர். யூ.பி.எஸ்.சி. தேர்வில் மிகச் சிலரால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும் பாடப் பிரிவுகளில் ஒன்று தமிழ் மொழிப் பாடம். அதைத் தேர்ந்தெடுத்து அகில இந்திய அளவில் 71-வது இடத்தைப் பிடித்துத் தமிழக அளவில் இரண்டாம் இடத்தில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார் மதுபாலன். ராஜபாளையத்தில் பள்ளிப் படிப்பை முடித்து, ராமபுரத்தில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் பொறியியல் பட்டம் பெற்றவர். சிறு வயதிலிருந்தே சிவில் சர்வீசஸ்தான் இவரது இலக்கு என்றாலும் இன்றைய காலச் சூழலுக்கு எதிர்நீச்சல் போடவே இன்ஜினியரிங்கில் பட்டம் பெற்றிருக்கிறார். சென்னை டி.சி.எஸ்.-ல் வேலை கிடைத்தபோதும் வேண்டாம் என்று முடிவெடுத்தவர், பிறகு தமிழ் மொழிப் பாடப் பிரிவில் சுயமாகத் தயாராகி ஐ.ஏ.எஸ். ஆகியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
Comments are closed.