தமிழக இளைஞர்களை தொழில் முனைவோர்களை உருவாக்கும் விதத்தில் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் பல்வேறு துரை சார்ந்த பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதன் ஒருபகுதியாக வருகிற மார்ச் 26 முதல் 28ம் தேதி வரை மூன்று நாட்கள் சென்னை ஈக்காடுதாங்கலில் உள்ள தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சி வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது., பேக்கரி பொருட்கள் தயாரித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் தொடர்பாக நடைபெற உள்ள மூன்று நாட்கள் பயிற்சி முகாம் 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.இப்பயிற்சியில் பேக்கரி பொருட்களுக்கான மூலப்பொருட்கள் தேர்வு, உபகரணங்களின் உள்ளீடுகள், தொடர்பாக விரிவான பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும் இப்பயிற்சி முகாமில் தமிழக அரசின் மூலம் வழங்கப்பட உள்ள கடன்கள் மற்றும் மானிய உதவிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட உள்ளது.பத்தாம் வகுப்பு படித்த 18 வயதிற்கு மேற்பட்ட பேக்கரி தொழில் ஆரம்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இப்பயிற்சி முகாமில் பங்கேற்று பயனடையலாம். கூடுதல் விபரங்களை சென்னை, ஈக்காடுதாங்கலில் உள்ள தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு கழகத்தின் அலுவலக தொலைபேசி எண்ணான 866 810 81 41 மற்றும் 866 810 26 00 என்ற அலைபேசி எண்களில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.